தீவகத்தில் கால் வைத்தால் குடும்பத்தோடு அழிப்போம்! - மாகாணசபை உறுப்பினர் விந்தனுக்கு மிரட்டல்.


வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினத்தின் வீட்டின் மீது, வெள்ளை வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர், கல்வீச்சு தாக்குதல் நடத்தியதுடன் தீவகத்திற்குள் நுழைந்தால் குடும்பத்தோடு அழிப்போம் என அச்சுறுத்தி விட்டுச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மாகாண சபை உறுப்பினர் விந்தன் கருத்துத் தெரிவிக்கையில், நேற்றிரவு எனது வீட்டின் மீது சரமாரியாக கல்வீச்சு நடத்தப்பட்டது. இதன்போது வீசப்பட்ட கற்கள் வீட்டு கூரையின் மீதும், கதவுகள் ஜன்னல்கள் மீதும் வீழ்ந்தன.
வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினத்தின் வீட்டின் மீது, வெள்ளை வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர், கல்வீச்சு தாக்குதல் நடத்தியதுடன் தீவகத்திற்குள் நுழைந்தால் குடும்பத்தோடு அழிப்போம் என அச்சுறுத்தி விட்டுச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மாகாண சபை உறுப்பினர் விந்தன் கருத்துத் தெரிவிக்கையில், நேற்றிரவு எனது வீட்டின் மீது சரமாரியாக கல்வீச்சு நடத்தப்பட்டது. இதன்போது வீசப்பட்ட கற்கள் வீட்டு கூரையின் மீதும், கதவுகள் ஜன்னல்கள் மீதும் வீழ்ந்தன.
           
பின்னர் சிலர் வீட்டின் கதவினை காலால் உதைத்தார்கள். பின்னர் என்னுடைய பெயரை கூறி வெளியே வா என கடும்தொனியில் கத்தினார்கள்.இதனையடுத்து, நான் வெளிச்சத்தை போட்டுவிட்டு வெளியே வந்து மதிலால் எட்டிப் பார்த்தபோது வீட்டிலிருந்து 50 யார் தொலைவில் வெள்ளை நிற வாகனம் ஒன்று நின்றது. அதற்கருகில் சிலர் வாள் மற்றும் கம்பிகளுடன் நின்றிருந்தனர்.
அவர்கள் என்னைப் பார்த்து தீவகத்திற்குள் இனிமேல் நுழைந்தால் குடும்பத்தோடு அழிக்கப்படுவாய் என திட்டினார்கள்.பின்னர் அவர்கள் சென்று விட்டார்கள். இந்தச் சம்பவம் தொடர்பில் நான் யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று காலை முறைப்பாடு பதிவு செய்திருக்கிறேன் என்றார்.


Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila