தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போர் நடவடிக்கை இந்தியாவுக்காகவே நடத்தப்பட்டிருகின்றது. இந்தப் போருக்கு சாத்தியமான எல்லா வழிகளிலும் இந்தியா உதவியது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புதுடில்லியைத் தளமாகக் கொண்ட ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கான போரில், இலங்கை அரசாங்கம் ஆயுதங்கள், பயிற்சி மற்றும் விமானங்களை சீனா, பாகிஸ்தானிடம் இருந்து பெற்றது. அந்த நேரத்தில் இந்தியாவிடம் நீங்கள் உதவி கோரினீர்களா? அவ்வாறு கோரியிருந்தால் அதற்கு புதுடில்லி எவ்வாறு பதிலளித்தது? என்று மகிந்த ராஜபக்ஷவிடம் அவ் ஊடகம் கேள்வி எழுப்பியிருந்தது.
அதற்கு மகிந்த ராஜபக்ஷ, இந்திய மத்திய அரசு எமக்கு போர் நடவடிக்கைக்காக பல வழிகளில் உதவியது. எனினும் நாங்கள் கேட்கவில்லை. ஏனென்றால், நான் உங்களுடைய (இந்தியா) போருக்காகவே சண்டையிட்டேன். உண்மையில் இது இந்தியாவினுடைய போர், என்னுடைய போர் அல்ல.
தமிழீழ விடுதலைப் புலிகள் உங்களின் பிரதமர் ராஜீவ் காந்தியையும், பல பொதுமக் களையும், இந்தியாவில், உங்களுடைய மண்ணிலேயே கொலை செய்தனர். அந்த வகையில் இது என்னுடைய போர் மாத்திரம் அல்ல. அது இந்தியாவினுடைய போரும் தான்.
இது மனிதாபிமானப் போராக இருந்தது. இந்தியா சாத்தியமான எல்லா வழிகளிலும் எமக்கு உதவியது. ஊடகங்களிடம் அதிக மாக கூறி, நாங்கள் அதனை பகிரங்கப்படு த்த விரும்பவில்லை.
இந்தியா மாத்திரமல்ல, சீனா பிரித்தானியா, அமெரிக்காவும் கூட போரின் போது எமக்கு உதவின என்று மகிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.