தண்டனை விதிக்கும் நோக்கில் உள்ளக விசாரணை நடத்தப்பட மாட்டாது– நீதி அமைச்சர்

தண்டனை விதிக்கும் நோக்கில் உள்ளக விசாரணை நடத்தப்பட மாட்டாது– நீதி அமைச்சர் -

யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் தொடுர்பல் உள்ளக விசாரணைப் பொறிமுறைமை குறித்து இன்னமும் இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மனிதாபிமான சட்ட மீறல்கள்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் உள்ளக விசாரணைப் பொறிமுறைமை ஒன்றை அமைப்பது பற்றி இன்னமும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணைக் குழுவின் அறிக்கை குறித்தும் கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணைக் குழுவிற்கு பிரித்தானிய சட்டத்தரணி டெஸ்மன் டி சில்வா தலைமைதாங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே தமது அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளக விசாரணைப் பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டுமெனின் அதற்கு தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளக விசாரணை நடத்துவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக கடந்த அரசாங்கம் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவினை நிறுவியதாகத் தெரிவித்துள்ளார்.

உள்ளக விசாரணையானது தண்டனை விதிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையைக் கண்டறிந்து அதன் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படத்தும் நோக்கிலேயே உள்ளக விசா
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila