கூட்டமைப்பினை வலுப்படுத்த வலுக்கின்றது கோரிக்கை!!

தமிழ் தேசியக்கூட்டமைப்பினை கட்சியாகப்பதிவு செய்யவேண்டுமென்பதில் இலங்கை தமிழரசுக்கட்சிக்குள்ளும் குரல்கள் வலுத்துள்ளன. குறிப்பாக அரசியல் கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்வதற்கு தமிழரசுக்கட்சி அக்கறைகாட்டவில்லை என்று தமிழரசு கட்சியின் சிரேஷ்ட பிரதி தலைவரும், பேராசிரியருமான சீ.கே. சிற்றம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வதன் மூலமே தமிழ் தேசியத்துக்காக முன்னாள் தலைவர்கள் மேற்கொண்ட அர்ப்பணிப்புகள் அர்த்தமாக்கப்படும். ஆனால் இந்த விடயத்தில் இலங்கை தமிழரசு கட்சி அக்கறை இன்றி செயற்படுவதாக அவர் கூறியுள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila