முள்ளிவாய்க்காலில் ஆரம்பமான நடைப்பயணத்திற்கு த.தே.ம.முன்னணி ஆதரவு.

முள்ளிவாய்க்காலில் ஆரம்பமான நடைப்பயணத்திற்கு த.தே.ம.முன்னணி ஆதரவு.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை பிற்போடப்பட்டமையை கண்டித்தும் உள்ளக விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அரசியல் கைதிகள் உடன் விடுதலை செய்யப்பட வலியுறுத்தியும் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை கண்டறியவும் அவர்களுக்கு நீதி கிடைக்கவும்இ இன அழிப்புக்கு நீதி கிடைக்கவும் சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணையை வலியுறுத்தியும் ஈழத் தமிழ் இளைஞர் பேரவை முள்ளிவாய்க்காலில் ஆரம்பித்துள்ள நடைப்பயத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது முழுமையான ஆதரவை தெரிவித்து நடைப்பயணத்தில் இணைந்து கொண்டுள்ளது.

மேற்படி  நடைப்பயணத்தில் ஈடுபடும் இணைஞர்களுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணித் தலைவர் இன்னாசிமுத்து சத்தியசீலன்  தலைமையிலான அணி நேற்றய நேற்றயதினம்6ம் திகதி விசுவமடுவில் இணைந்து கொண்டது.
 

நேற்று மாலை மேற்படி நடைப்பயணம் செய்த அணியினர் பரந்தனை அடைந்தபோது பொலீசார் அவர்களது நடைபயணத்தை குழப்புவதற்கு முயற்சி முயற்சி செய்தனர். கடுமையான கெடுபிடிகளை மேற்கொண்டிருந்தனர். பாதுகாப்பு காரணங்களை காட்டி இரவு வேளையில் நடக்க முயடியாது என்று கூறி தடுத்துள்ளனர். அதனால் இரவு நடைபணயத்தை நிறுத்த மீண்டும் இன்று அதிகாலை 5.00 மணிக்கு பரந்தனில் இருந்து நடைபயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

மேற்படி போராட்டம் வெற்றிபெற தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது முழுமையான ஆதரவினை தெரிவித்துக் கொள்கின்றது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila