19வது திருத்தம் இன்னமும் முழுமையாக அமுலுக்கு வரவில்லையாம்!


19ம் திருத்தச் சட்டம் இன்னமும் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதம் 30ம் திகதி முதல் அமுல்படுத்தப்பட முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், 19ம் திருத்தச் சட்டம் குறித்த குழு நிலை விவாதத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் இவற்றை உள்ளடக்குவதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. 
19ம் திருத்தச் சட்டம் இன்னமும் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதம் 30ம் திகதி முதல் அமுல்படுத்தப்பட முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், 19ம் திருத்தச் சட்டம் குறித்த குழு நிலை விவாதத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் இவற்றை உள்ளடக்குவதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.
           
அனைத்து திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டு சட்டம் முழுவடிவம் பெற்றதன் பின்னரே சட்டத்தில் சபாநாயகர் கையொப்பமிடுவார். சபாநாயகர் உறுதிப்படுத்தப்படும் வரையில் சட்டம் அமுல்படுத்தப்படக் கூடிய சாத்தியங்கள் கிடையாது.
19ம் திருத்தச் சட்டம் உத்தியோகபூர்வமாக அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் ஜனாதிபதியின் பதவிக் காலம் ஐந்தாண்டுக்கு வரையறுக்கப்படுதல் மற்றும் அரசியல் சாசன பேரவை உருவாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அமைச்சரவையின் எண்ணிக்கை 30 ஆக வரையறுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila