மாணவி வித்தியாவின் கொலைப் பின்னணியில் ஆயுதக் குழுக்கள்! - விஜயகலா மகேஸ்வரன்

வடக்கில் இடம்பெறும் அனைத்துக் குற்றச்செயல்கள் மற்றும் குழப்பகரமான செயல்களுக்கு பின்னணியில் ஆயுதக் குழுக்கள் செயற்பட்டு வருவதாகவும், வித்தியாவின் படுகொலைக்கும் இந்த ஆயுதக்குழுவே காரணமெனவும் பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் நேற்று   கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

வடக்கில் இருக்கும் குறித்த ஆயுதக்குழுவை ஒழித்துக்கட்ட ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை எடுக்கவேண்டிய அதேவேளை, மாணவி படுகொலையுடன் தொடர்புபட்டவர்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமென இதன்போது குறிப்பிட்டார்.

இதேவேளை, மாணவி வித்தியாவின் விடயத்தில் பொலிஸார் அசட்டையாக செயற்பட்டதாக குறிப்பிட்ட பிரதியமைச்சர் விஜயகலா, கடமையை உரிய முறையில் செய்யத்தவறிய பொலிஸாரை பதவி விலக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila