யாழில் மாணவிகளை படம் எடுத்த இளைஞர்கள்: விரைந்து கைது செய்த பொலிசார் !


யாழ்.சுன்னாகம் கந்தரோடை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை முன்பாக நின்று பாடசாலை மாணவிகளை கைத்தொலைபேசியில் புகைப்படம் எடுத்த இரு இளைஞர்களை சுன்னாக பொலிசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அளவெட்டி தெற்கினை சேர்ந்த 21 வயது மற்றும் 23 வயதுடையவர்கள் என பொலிசார் தெரிவித்தனர், அத்துடன் கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.
குறித்த இரு இளைஞர்களும் வெள்ளிக்கிழமை காலை குறித்த பாடசாலைக்கு முன்பாக சந்தேகத்திற்கு இடமான முறையில் கைத்தொலை பேசியை பிடித்திருந்ததை அவதானித்தவர்கள் சுன்னாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பிரகாரம் பாடசாலைக்கு சிவில் உடையில் சென்ற பொலிசார் குறித்த இளைஞர்கள் இருவரும் பாடசாலை மாணவிகளை படம் பிடித்து கொண்டு இருப்பதனை கண்ணுற்று இருவரையும் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila