புலம்பெயர் இணையங்களை தடை செய்ய சீ.வி.கே கோரிக்கை!

sivangnanam.pngதமிழரசுக்கட்சியனை விமர்சித்து கேள்வி எழுப்பும் புலம்பெயர் தமிழ் ஊடகங்களை தடை செய்யவேண்டுமென வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கோரியுள்ளார்.இலங்கையினில் வெளியிடப்படும் அனைத்து இணையங்களும் முறைப்படி பதிவு செய்யப்படுவதற்கும் அவை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்ததுவதற்கு கூடிய சட்ட ஏற்பாடுகளை துரிதமாக மேற்கொள்ளுமாறும் பதிவு செய்யப்படாத மற்றும் விதிகளை மீறும் புலம்யெபர் இணைய தளங்களை தொழில்நுடப ரீதியாக தடைசெய்யும் அதிகாரத்தை ஏற்படுத்தும் சட்ட ஏற்பாடுகளைநடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இலங்கை அரசின் புனரமைப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரை கோரியுள்ளார்.
இது தொடர்பினில் வடமாகாணசபை அமர்வினில் பிரேரணையொன்றினையும் சீ.வி.கே.சிவஞானம் கொண்டுவந்திருந்தார்.
அவற்றினை தடைசெய்ய காரணமாக அவதூறு செய்திகள்,சந்ததியினை சீரழிக்க கூடிய வெளியீடுகளை அவை வெளியிடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வடமாகாண முதலமைச்சரின் பதவியை கவிழ்த்து ஆட்சி கதிரையேற வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் சுமந்திரன் ஆதரவு கும்பலான ஆனோல்ட் ,சயந்தன்,சுகிர்தன் மற்றும் அஸ்மின் போன்றோர் முன்னெடுத்ம சதி முயற்சிகள் இணைய ஊடககங்களாலேயே அம்பலப்படுத்தப்பட்டு முறியடிக்கப்பட்டிருந்தது.
அதே போன்று அமைச்சர்கள் முதலமைச்சரினை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்போதாக மிரட்டியதும் இணைய ஊடகங்களாலேயே அம்பலமாகியிருந்தது.இந்நிலையினில் புலம்பெயர் இணைய ஊடககங்களை கடுமையாக விமர்சித்து வரும் இக்கும்பல் இலங்கை அரசினூடாக அவற்றினை தடை செய்ய மீண்டும் முயல்வது அம்பலமாகியிருக்கின்றது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila