கூட்டமைப்பு இடையூறு விளைவிக்கவில்லை! - மனோ கணேசன் கருத்துக்கு சிவாஜிலிங்கம் பதிலடி


போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை கோரி வரும் தமக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வித தடைகளையும் ஏற்படுத்தவில்லை என வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை கோரி வரும் தமக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வித தடைகளையும் ஏற்படுத்தவில்லை என வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
           
சர்வதேச விசாரணைகளை வலியுறுத்தி மேற்கொண்டு வரும் போராட்டங்களுக்கு கட்சி தடை விதிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். கடந்த 10ம் திகதி கிளிநொச்சியில் போர்க்குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் குறித்து சர்வதேச விசாரணை அவசியமானது என அழுத்தம் கொடுக்கும் வகையில் சிவாஜிலிங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பாதயாத்திரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைபாடு கிடையாது எனவும் அது சிவாஜிலிங்கத்தின் தனிப்பட்ட நிலைப்பாடு எனவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கருத்து வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பில் திவயின பத்திரிகை எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே சிவாஜிலிங்கம் தமது போராட்டங்களுக்கு கட்சி தடை விதிக்கவில்லை என தெளிவுபடுத்தியுள்ளார். அமைச்சர் மனோ கணேசன் எப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டார்? அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளராக எப்போது மாறினார்? என்பதனையும் அறிந்து கொள்ள விரும்புவதாக சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila