முல்லைத்தீவு உழவர் பெருவிழாவில் வைரமுத்து

வடக்கு உழவர் பெருவிழா சற்று முன்னர் முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரியில் மழைத்தூறலுடன் ஆரம்பமானது.
வடமாகாண விவசாய அமைச்சின் 2016 ஆம் ஆண்டுக்கான உழவர் பெருவிழா முல்லைத்தீவு, முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஆரம்பமாகியுள்ளது.
வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெறும் இப்பெருவிழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மற்றம் சிறப்பு விருந்தினராக தமிழகத்தின் பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்துவும் கலந்துகொண்டுள்ளனர்.

உழவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக நடைபெறவுள்ள இந்த உழவர் பெருவிழாவில் மாவட்ட ரீதியாக 2015 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கையாளர்களும், சேதனப் பயிர்ச் செய்கையாளர்களும், கால்நடைப் பண்ணையாளர்களும், கோழிப் பண்ணையாளர்களும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila