2016 இல் தீர்வு இல்லையேல் சம்பந்தன் பதவி விலகவேண்டிவரும்-சிறீதரன்(காணொளி)

இவ்வாண்டு சம்பந்தன் ஐயாவுக்குரிய ஆண்டு என
பாராளுமன்ற உறுப்பினர் திரு சிறீதரன் அவர்கள் பிரித்தானிய வானொலி ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்குள் சம்பந்தன் அவர்கள் தீர்வை பெற்றுத்தருவதாக தெரிவித்துள்ளார் எனவே அவர் அரசியலில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் அவ்வாறு தெரிவித்திருக்கிறார் எனவே அவருக்காக இந்த ஆண்டை நாம் பொறுமையோடு அவருக்கு வழங்குவோம். இந்த ஆண்டுக்குள் தீர்வை பெறாவிட்டால் தமிழ் மக்கள் மிகத் தெளிவானவர்கள் நாம் அவர்களிடம் வாக்கு கேட்டு மீண்டும் செல்லமுடியாது என்பதை அவருக்கு நேரடியாகவே தெரிவித்துள்ளேன்.

அத்தோடு இந்த ஆண்டுக்குள் அவர் குறிப்பிட்டதுபோல தீர்வை எட்டமுடியாமல் போனால் அவர் ஓய்வு பெறுவார் என்றும் அவருடைய நிலைப்பாட்டை அவர் மாற்றவேண்டிவரும் என்றும் கருத்துதெரிவித்துள்ளார். அவர் வழங்கிய முழுமையான நேர்காணலை கீழே காணலாம்.

Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila