இங்கிலாந்தில் இன ஒதுக்கலுக்கு ஆளாகியுள்ள இலங்கை யுவதி!

இங்கிலாந்து பெற்றோரால் தத்தெடுக்கப்பட்ட இலங்கை யுவதியொருத்தி வெள்ளை இனத்தவரின் இன ஒதுக்கல் கொள்கை காரணமாக பெரும் மன அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளதாக பீ.பீ.சி. தெரிவித்துள்ளது.
பீ.பீ.சி. செய்திச்சேவை இது தொடர்பான செய்தியொன்றை நேற்று ஒளிபரப்பியிருந்தது.
குறித்த செய்தியின் பிரகாரம் பவித்ரா எனும் குறித்த யுவதி இலங்கையின் கத்தோலிக்க மடம் ஒன்றில் வளர்க்கப்பட்ட நிலையில் ஒருமாதக் குழந்தையாக இருக்கும் போது அயர்லாந்து பெற்றோரினால் தத்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் ஜெனி ஸ்மித் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள போதும் குறித்த யுவதி தனது தோலின் நிறம் காரணமாக வெள்ளைக்காரர்கள் மத்தியில் ஏளனத்துக்குள்ளாவதாக கவலை வெளியிட்டுள்ளார்.
சிறுவயது முதலே தான் இன ஒதுக்கல் செயற்பாடுகள் காரணமாக பெரும் அசௌகரியத்தை எதிர் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila