வடக்கில் மீண்டும் இராணுவச் சோதனைச்சாவடி! பயணிகள் அவதி!

மன்னாரில் மீண்டும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வருவதால் மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதாக கவலையடைந்துள்ளனர். மன்னார் தள்ளாடி இராணுவ முகாமிற்கு முன்பாக குறித்த சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு வருகிறது.
யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யு32 பாதையில் உள்ள மரவன்புலோ பிரதேச வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி மீட்கப்பட்டுள்ளமை மற்றும் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட இலுப்பைக்கடவை கமநல சேவைகள் நிலையத்திற்கு சொந்தமான காணியின் பின் பகுதியில் இருந்து நேற்று மாலை ஒரு தொகுதி வெடி பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளமையை அடுத்து மன்னார் மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் ஏ 14 மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் தள்ளாடி இராணுவ முகாமிற்கு முன்பாக சோதனைச் சாவடி பொலிசாரால் அமைக்கப்பட்டுவருகிறது. இன்று அமைக்கப்பட்ட குறித்த சோதனைச் சாவடியூடாக செல்லும் வாகனங்கள் சேதனைக்கு உட்படுத்தப்பட்டுவருகிறது. இதனால் பயணிகள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது என விசனம் தெரிவிக்கின்றனர்.
யாழ். சவகச்சேரி மற்றும் மன்னார் இலுப்பக்கடவை போன்ற இடங்களில் வெடிபொருட்கள் மீட்க்கப்பட்டமையை அடுத்து மன்னாரில் ஏற்படுத்தப்பட்டுள்ள சோதனைச்சாவடி தொடர்பில் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
போர்க்காலத்தில் இருந்த சோதனை கெடுபிடி மீண்டும் ஆரம்பித்துவிடுமோ? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila