யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
‘இனப்பிரச்சினைக்கு சமஷ்டி அடிப்படையில் தீர்வு காணப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்திருந்ததுடன், அதனை முன்னிலைப்படுத்தியே வாக்கு கேட்டனர். அதற்கமைய மக்கள் ஆணையினையும் பெற்றுக் கொண்டனர்.
அவர்கள் கோரிய சமஷ்டி முறையிலான யோசனைகளே வடமாகாண சபை மற்றும் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு திட்டங்களில் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த யோசனைகள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் வேறுமாதிரியான கருத்தினை தற்போது தெரிவித்துள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகளானது குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிப்பதற்கு சமமானது என கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் தெரிவித்துள்ளார். இதில் எந்தவித நியாயமும் இல்லை. இதனால் சம்பந்தர் எந்த இலக்கை நோக்கி பயணிக்கின்றார் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
நாம் இவ்வாறு கூறுவதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராகவோ அல்லது சம்பந்தருக்கு எதிராகவோ செயற்படுவதாக அர்த்தமாகாது. அவ்வாறு யாரும் செயற்படவில்லை’ என்றும் கூறினார்.