தனக்கான கடமைகளை அறிந்து கொண்டு வடக்கு ஆளுநர் செயற்பட வேண்டும்! விக்கினேஸ்வரன்


வடமாகாண ஆளுநர் தனக்கான கடப்பாடுகள் எவை என்பதை அறிந்து கொண்டு செயற்பட்டால் மிகவும் நல்லது என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.இன்று யாழ். பொது நூலகத்தில் இடம்பெற்ற வடக்கு மீனவ பிரதிநிதிகளுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்த தெரிவித்த போதே ஆளுநர் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,வடக்கு மாகாண ஆளுநர் சில விடயங்களை செயற்பாடுத்துவதும் அதனை அவர் எதிர் நோக்கும் விதமும் வித்தியாசம் இருப்பதை நான் ஏற்றுகொள்கிறேன். அவர் இப்பதவிக்கு முன்பு அரசியல்வாதியாகவும் தென் மாகாண ஆளுநராகவும் இருந்தவர். அந்த வகையில் தற்போது அவர் அனைத்து விடயங்களையும் அரசியலாகப் பார்க்கிறார்.இதற்கு முன் இருந்த ஆளுநர் பள்ளிகஹார ஒரு அரச அதிகாரியாக செயல்பட்டு அதிகாரிக்குரிய செல்பாட்டை அனைத்து விடையத்திலும் செய்தார்.ஆகவே இது தொடர்பில் ஆளுநரை குறை சொல்வதில் பயனேதும் இல்லை. நமக்கும் ஆளுனருக்கும் இடையில் சரியான ஒரு புரிந்துணர்வு ஏற்படவேண்டும். அந்தபுரிந்துணர்வு விரைவில் ஏற்படும் அதுவே எவ்வகையில் என்பது பற்றி தற்போது கூறத்தெரியவில்லை என்றார்.

Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila