தரைமட்டமாகிய சலாவ பிரதேசம்! - பாதுகாப்பை உறுதிப்படுத்த 96 மணிநேரமாகும்


கொஸ்கம, சலாவ இராணுவ முகாமின் ஆயுத களஞ்சியத்தில் ஏற்பட்ட விபத்தால் அந்தப் பிரதேசம் முழுவதும் அழிந்துபோயுள்ளது. முகாமை அண்மித்த பிரதேசத்தை பாதுகாப்பான பிரதேசம் என தற்போதைக்கு உறுதிப்படுத்தி கூற முடியாது என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்தார்.
கொஸ்கம, சலாவ இராணுவ முகாமின் ஆயுத களஞ்சியத்தில் ஏற்பட்ட விபத்தால் அந்தப் பிரதேசம் முழுவதும் அழிந்துபோயுள்ளது. முகாமை அண்மித்த பிரதேசத்தை பாதுகாப்பான பிரதேசம் என தற்போதைக்கு உறுதிப்படுத்தி கூற முடியாது என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்தார்.
           
தீ முழுமையாக அணைக்கப்பட்ட போதும் ஆயுத களஞ்சியத்திலிருந்து தொடர்ந்து வெடிப்பு சத்தங்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றன. இராணுவ முகாமை சுற்றி காணப்படும் பிரதேசத்தில் விழுந்து கிடக்கின்ற ஆயுதங்களையும் ஆயுதங்களின் பாகங்களையும் அகற்றி துப்பரவு செய்வதற்கு 96 மணிநேரம் இராணுவத்தினரால் கோரப்பட்டுள்ளது. அந்தவகையில் 96 மணி நேரத்தின் பின்னரே இராணுவ முகாமை சுற்றியுள்ள பிரதேசங்களை பாதுகாப்பான பிரதேசமாக அறிவிக்க முடியும். வீடுகளுக்குள்ளும் வெளியிலும் ஆயுத களஞ்சியத்திலிருந்து சிதறிய ஆயுதங்களின் துண்டுகளும் பாகங்களும் வந்து விழுந்துள்ளன. சில ஆயுதங்கள் முழுமையாக விழுந்து காணப்படுகின்றன. எனவே 96 மணித்தியாலத்திற்கு பின்னரே குறித்த பிரதேசத்தில் பாதுகாப்பு தொடர்பான விடயங்களை உறுதிப்படுத்தி கூறமுடியும்.என்றார். கொஸ்கம, சலாவ இராணுவ முகாமின் ஆயுத களஞ்சியத்தில் ஏற்பட்ட விபத்தால் அந்தப் பிரதேசம் முழுவதும் அழிந்துபோயுள்ளது. முகாமை அண்மித்த பிரதேசத்தை பாதுகாப்பான பிரதேசம் என தற்போதைக்கு உறுதிப்படுத்தி கூற முடியாது என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்தார்.






Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila