பொலிஸ் என்ற போர்வையில் சிவில் பிரச்சினையில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு தலையீடு!


சிவில் பொலிஸார் எனக்கூறி பொது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குச் சென்ற இராணுவ புலனாய்வு பிரிவினர் இருவர் மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ். கொழும்புத்துறை பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த இருவரும், கொழும்புத்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் நடந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக தாம் சிவில் பொலிஸார் என கூறிச் சென்றுள்ளனர். 
சிவில் பொலிஸார் எனக்கூறி பொது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குச் சென்ற இராணுவ புலனாய்வு பிரிவினர் இருவர் மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ். கொழும்புத்துறை பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த இருவரும், கொழும்புத்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் நடந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக தாம் சிவில் பொலிஸார் என கூறிச் சென்றுள்ளனர்.
           
இருவரின் நடத்தைகளை அவதானித்த வீட்டு இளைஞர் சந்தேகம் கொண்டு இன்று யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த இருவரையும் பொலிஸார் அழைத்து விசாரணை மேற்கொண்டதுடன், கடுமையாக எச்சரிக்கை விடுத்து அனுப்பியுள்ளனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila