ஒற்றையாட்சிக்குள் சமஸ்டியா? தெரியாதென்கிறார் இரா.சம்பந்தன்!

sampanthan-tna.png
ஒற்றையாட்சிக்குள் சமஸ்டியென தான் மன்னார் கூட்டத்தில் தெரிவிக்கவில்லையென தெரிவித்துள்ளார் இரா.சம்பந்தன்.தமிழரசுக்கட்சியின் கட்சியின் மத்திய செயல்குழுக்கூட்டத்திலேயே  இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கூட்டத்தில் அண்மையினில் மன்னாரில் தடம் மாறுகின்றதா தமிழ் தேசியம் எனும் கருப்பொருளினில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட இரா.சம்பந்தன் ஒற்றையாட்சிக்குள் சமஸ்டி எனும் தீர்வு பற்றி தான் பரீசிலித்து வருவதாக தெரிவித்திருந்தார். இது தொடர்பில் கட்சியின் ஏனைய பிரமுகர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.அப்போதே தான் அவ்வாறு எதனையும் தெரிவித்திருக்கவில்லையென இரா.சம்பந்தன் மறுதலித்துள்ளார்.
இது தொடர்பில் குறித்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களுள் ஒருவரான சிவகரனிடம் கேள்வி எழுப்பிய போது இரா.சம்பந்தன் அவ்வாறு சொன்னது உண்மையெனவும் தமது உத்தியோகபூர்வ முகநூலிலும் ஏனைய ஊடகவியலாளர்கள் வெளியிட்ட காணொலியிலும் இது ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila