ஐயாவை முள்ளிவாய்க்காலில் அசிங்கப்படுத்திவிட்டார்கள்-சுமந்திரன்(காணொளி)


இன்றைய முள்ளிவாய்க்கால் நிகழ்வில் கலந்துகொள்ள வந்த த.தே.கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனை ஊடகவியலாளர் ஒருவர் பேசவிடாது கேள்விகேட்டு அசிங்கப்படுத்தி விட்டதாக எம்.ஏ.சுமந்திரன் கடுமையாக சாடியுள்ளார்.

தமிழ் மக்களின் தலைமகன் சம்பந்தன் ஐயா எனக்கூறிய சுமந்திரன் அவரை இவ்வாறு முக்கிய நிகழ்வொன்றில் பேசவிடாது குழப்பியமை மிகத்தவறான செயற்பாடு எனவும் இதனை தமிழரசுக்கட்சி கடுமையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் வடமாகாணசபையில் பணியாற்றும் ஒரு ஊழியர் எனவும் அவரின் வேலையில் அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெறும் என விடயமறிந்த வட்டாரங்களிலிருந்து தமிழ்கிங்டொத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

ஆனால் சம்பந்தனை அந்த ஊடகவியலாளர் மட்டுமல்ல பல காணாமல்போன,உறவுகளை பறிகொடுத்த உறவுகளும் அங்கு வசைபாடியதை காணொளிகள் வெளிக்காட்டியுள்ளது.


Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila