பொது மக்கள் மீது சூடு நடத்த உத்தரவிட்ட பிரிகேடியர் கைது!


ரத்துபஸ்வெலவில் குடிநீருக்காக போராட்டம் நடத்திய பொதுமக்கள்  மீது துப்பாக்கிசூடு நடத்த கட்டளையிட்ட பிரிகேடியர் அனுர தேசப்பிரிய குணவர்த்தனவை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரத்துபஸ்வெலவில் குடிநீருக்காக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கிசூடு நடத்த கட்டளையிட்ட பிரிகேடியர் அனுர தேசப்பிரிய குணவர்த்தனவை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
           
வாக்குமூலமளிப்பதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகிய பிரிகேடியர் அனுர தேசப்பிரிய குணவர்தன இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு ரத்துபஸ்வெல வெலிவேரிய சந்தியில் சுத்தமான குடிநீர் கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டதனால் மூவர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila