தாம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக கூட்டமைப்பு பங்காளிக்கட்சிகள் கவலை!


20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றிருந்தது. 

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனும் புறக்கணித்துள்ளதாக அக்கட்சிகளின் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

கொழும்பில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற முக்கிய சந்திப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள கட்சிகள், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து செயற்படும் கட்சிகள், பாராளுமன்ற பிரதிநித்துவத்தை பெற்றிருக்காத சில கட்சிகள், தமிழரசுக் கட்சி மற்றும் ஏனைய கட்சிகள் என்பன கலந்து கொண்டிருந்தன. 

அனைத்துக் கட்சிக் கூட்டமாக 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கட்சிகளின் கரு த்துக்களைப் பெறும் முகமாக இக் கூட்டம் நடைபெற்றிருந்தது. 

தமிழ் தேசியக் கூட்ட மைப்பில் அங்கத்துவம் வகிக்கின்ற ரெலோ, புளொட், ஈபி.ஆர்.எல்.எப் ஆகியன பதிவு செய் யப்பட்ட கட்சிகளாக இருப்பினும் அவற்றுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரி விக்கப்படுகிறது. 

ஏற்கெனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பாக சந்திப்புக்களை செய்யும் போது பங்காளிக் கட்சித் தலைவர்களையும் அழைக்க வேண்டும் என கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்ப ட்டிருந்த போதும் கூட்டமைப்பின் தலைவர் கூட பங்காளிக் கட்சிகளை அழைக்காது அவரும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் கலந்து கொண்டுள்ளனர்.

எனவே, எதிர்காலங்களில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டங்களிலும் தம்மை யும் உள்வாங்க வேண்டும் என ஈபி.ஆர்.எல்.எப், ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் ஜனா திபதியிடம் எழுத்து மூலமாக கோரிக்கை ஒன்றினை முன்வைக்கவுள்ளதாகவும் தெரியவருகிறது.                    
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila