பட்டப்பகலில் வெட்டும் ஆவா குழு! பின்புலத்தில் எந்த அரசியல் சக்தி? வியாளேந்திரன் எம்.பி.கேள்வி

ஒரு மாகாணம் அல்லது மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு படையின் அளவை விட வடக்கிற்கு அதிகளவான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அதிகப்படியான பொலிஸ் நிலையங்கள் காணப்படுகின்றன.
மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்


இவ்வாறான நிலையில் ஆவா குழு என்ற ஒன்று பகிரங்கமாக பட்டப்பகலில் வெட்டுகின்றது, என்றால் அதன் பின்புலத்தில் எந்த அரசியல் சக்தி இருக்கின்றது? என த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் தெரிவித்தார்.
லங்காசிறி 24 செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்கள், யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்து கொண்டிருக்கும் இந்த நிலையில், எமது இளைஞர்களை திட்டமிட்டு இதில் உள்வாங்கி சிக்க வைக்கும் சதியே இது எனவும் குறிப்பிட்டார்.
நல்லாட்சியிலும் கிழக்கில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடைபெறுகின்றது. ஒருவன் குற்றம் செய்தால் அதற்கு யார் காரணம் என்பதை கண்டறிய வேண்டும். நெருப்பு இல்லாமல் புகை வராது எனவும் வியாளேந்திரன் தெரிவித்தார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila