
மேலும் தெரிவிக்கையில், போராட்ட காலத்தில் பல உயிர்களை இழந்தோம். போரில் மேலதிக இறப்புக்கள் என்பது தவறுதலாக இடம்பெறும் இறப்புக்கள் மட்டுமே. போராட்ட வரலாற்றில் கவனிக்க வேண்டியது, இப்போரினால் எதைப் பெற்றோம் என்பது மட்டுமே.
இவ் உலகத்தில் மிகத் திறமையான ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்தும் அதன் இறுதிப் பெறுபேறு என்ன?
படைமுகாம்கள், காணாமல்போனோர், விதவைக் குடும்பங்கள், அங்க வீனர்களே மிச்சம். இந்நிலையில் இந்திய அரசினால் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தச் சட்ட மாகாணசபையும் பதவிப் பங்கீட்டினால் உடைந்து போயுள்ளது.
இவையெல்லாவற்றுக்கும் காரணம் எமது தலைவர்களின் சாணக்கியமற்ற தன்மையும், இராஜதந்திரமாகச் செயற்படாமையுமேயாகும் எனக் குறிப்பி ட்டுள்ளார்.