குச்சவெளியில் 1800 ஏக்கரில் சிங்களவர்களது விடுதி!


hotel3

திருகோணமலை மாவட்டத்தில் வடமாகாணத்தில் உள்ள குச்சவெளி நிர்வாகப் பிரிவின் பிரதேச செயலகம், இந்த வாரம் இலங்கை ஜனாதிபதி செயலகத்தால் விடுக்கபட்ட பணிப்புரையொன்றையடுத்து திண்டாடிவருகின்றது. திருகோணமலைக்கு கிழக்காக கடற்கரை வழியே கொக்குளாயிலிருந்து திருகோணமலை வரை வடக்கே 1,800 ஏக்கர் நிலப்பகுதியும், அதன் இரசாயன தொழல் சாலையொன்றிற்காக இலங்கை அரசினால் முழுக்க கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
hotel2
இதேவேளை ஜங்கிள் பீச் ரிசோர்ட் எனும் விடுதியையும் அரச ஆதரவுடன் சிங்களவர்கள் அமைத்துள்ளனர். திருகோணமலை நகரிலிருந்து 22 கி.மீ. வடக்கே திரிகோணமலை –புல்மோட்டை நெடுஞ்சாலையில்,இறக்கண்டி பாலத்திற்கும் இடையில் 22 கி.மீ தூரத்தில் கும்புறுப்பிட்டியில் இது அமைந்துள்ளது.
hottel12013 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட “ஜங்கிள் பீச் ரிசோர்ட்ஸ் , உகா எஸ்கேப்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது, இது தென்னிந்திய நிறுவனமான ஃபின்கோ குழுமத்தின் ஒரு பெருநிறுவன கூட்டு நிறுவனத்தால் நடத்தப்படுகின்றது. ஜங்கிள் பீச்சிற்க்கான நிலம் ராஜபக்ச அரசாங்கத்திலிருந்து 99 வருட குத்தகைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்ட நிலங்கள் மற்றும் கம்பனிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்ட நிலங்கள் தமிழர் விவசாயிகளின் மீனவர்கள் மற்றும் தமிழ் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு சொந்தமானதென்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila