முன்னணிக்கு இல்லை:தமிழரசுக்கு உண்டு!


angதமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு இன்முகம் காட்டும் சுதந்திரக்கட்சியின் உள்ளுர் வால்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு புறமுதுகு காட்டிவருகின்றன. வடமராட்சியில் விளையாட்டு மைதானம் ஒன்றை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தேர்தல் பிரசாரத்திற்காக மைதானத்தை கோரியபோது அது மறுக்கப்பட்டுள்து. குறித்த மைதான விளையாட்டு அணியின் தலைவரின் தன்னிச்சையான முடிவால் அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இமையாணன் மத்திய விளையாட்டு கழக மைதானமே தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு வழங்கப்படவில்லை.
அந்த பகுதியில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் ஒருவர், விளையாட்டு கழக மைதானத்தை பிரசாரத்திற்காக கோரியிருக்கிறார். எனினும், விளையாட்டு கழக தலைவரான ரூபாகரன் என்ற நபர், அங்கஜன் இராமநாதனின் ஏற்பாட்டில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் ஏற்பாட்டில் தேர்தலில் போட்டியிடுகிறார். அவர், மைதானத்தை வழங்க முடியாதென மறுத்துள்ளார்.
அங்கஜன் இராமநாதன் சிறிய நிதி வழங்கினார் என்று கூறியே, மறுக்கப்பட்டுள்ளது.
எனினும் தமிழரசுக்கட்சியின் பிரச்சாரக்கூட்டத்திற்கு அவர் மைதானத்தை திறந்துவிட சம்மதித்துள்ளதாக தெரியவருகின்றது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila