கச்சதீவு அந்தோனியார் ஆலயத்திருவிழாவில் சிங்களத்தில் திருப்பலியாம்!

கச்சதீவு புதிய அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் இம்முறை சிங்கள மொழியிலும் திருப்பலி ஆராதனை நடத்தப்படும் என்று கடற்படைப் பேச்சாளர் தினேஸ் பண்டார தெரிவித்துள்ளார்.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது. திருவிழாவில் இந்தியாவில் இருந்து 5 ஆயிரம் பேரும், இலங்கையில் இருந்து 8 ஆயிரம் பேரும் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கச்சதீவு திருவிழாவில் முதல் தடவையாக, தமிழ் மொழியுடன், சிங்கள மொழியிலும் திருப்பலி ஆராதனை நடத்தப்படவுள்ளது. காலி மறை மாவட்ட ஆயர் ரேமன்ட் விக்கிரமசிங்க ஆண்டகை சிங்களத்தில் ஆராதனையை நிகழ்த்தவுள்ளார்.
கச்சதீவு திருவிழாவில், ஏனைய பகுதிகளைச் சேர்ந்த மக்களையும் பங்கேற்க ஊக்குவிக்கும் வகையிலேயே சிங்கள மொழியிலும் ஆராதனையை நடத்த முடிவு செய்யப்பட்டள்ளது என்றும் பேச்சாளர் தெரிவித்தார்.Kachchatheevu_church_04
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila