கடற்றொழிலாளர் போராட்டத்துக்கு எஸ்.ரி.எவ் வந்தது சுமந்திரனைக் காணவில்லை



யாழ்ப்பாணம் நீரியல்வளத்தி திணைக்களத்தின் முன்னால் நடைபெற்ற போராட்டத்தின்போது அருகிலுள்ள விசேட அதிரடிப்படை முகமிலிருந்து வந்த அதிரடிப்படையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை வீடியோ எடுக்க முற்பட்டதால் அப்பகுதியில் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்று என கோசமிட்டுக்கொண்டிருந்தவர்கள் விசேட அதிரடிப்படையினருக்கு எதிராக கோசங்களை எழுப்ப ஆரம்பித்தனர். அதனையடுத்து விசேட அதிரடிப்படையினர் முகாமிற்குள் சென்றுவிட்டனர். அதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் எஸ்.ரி.எப் வந்திட்டுது சுமந்திரனைக் காணவில்லை என கூச்சலிட்டிருந்தனர்.

எனினும் முகாமிற்குள் இருந்தவாறு போராட்டங்காரர்களை அவதானித்துக்கொண்டிருந்த அவர்கள் போராட்டங்களை தடுக்கும் ஆயுதங்களுடன் தயார் நிலையில் இருந்தததையும் காணமுடிந்தது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila