தியாகி திலீபனின் 31-வது நினைவேந்தல் நாளை ஆரம்பம்

தியாகி திலீபனின் 31-வது ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் நாளை; 15-ம் திகதி இடம்பெறவுள்ளது. 

தியாகி திலீபனின் நினைவு நாட் கள் நடைபெறும் இக் காலங் களில் களியாட்டங்களைத் தவிர்த்து திலீபனின் நினைவுகளை சுமந்து உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என தாயக மற்றும் புலம்பெயர் உறவுகளையும் வேண்டி நிற்கின்றோம்.

இவ்வாறு ஜனநாயகப் போராளிகள் கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் வலியு றுத்தப்பட்டுள்ளது.

தமிழர் தாயக அரசியல்பரப்பில் ஆட்சி அதி காரத்தில் யார் ஆதிக்கம் செலுத்தும் சக்தி என்பதற்கான முனைப்புக்கள் தீவிரம்பெற்று வரும் இச்சூழலில். 

ஒடுக்கப்பட்ட ஓர் தேசிய இனத்தின் அரசியல் பொருளாதார சமூக விடு தலையினை நேசித்து அதற்கு வலுச்சேர்த்து எம் இனத்தின் நியாயப்பாடான அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரம் கூட அருந்தாது உண்ணாநோன்பிருந்து நல்லூர் வீதியில் வளர்ந்த வேள்வித்தீயில் மூச்சடங்கிப்போனவன் எங்கள்  தியாகி திலீபன்.  

இற்றைவரை திலீபனின் ஒற்றைக்கோரி க்கை கூட நிறைவேறாத நிலையில் துன்ப த்தின் நீட்சியில் தமிழினம் இடர்படும் இச் சூழலில் தியாகி திலீபன் அவர்களின் 31வது ஆரம்ப நினைவேந்தல் நிகழ்வுகள் 
(15.09) நாளை காலை 10.10 மணியள வில் நல்லூரில் அமைந்துள்ள திலீபன் நினைவிடத்தில் இடம்பெற இருக்கின்றது. 

ஆரம்ப நினைவேந்தல் நிகழ்வுகளில் அனைவரை யும் கலந்து கொள்ளுமாறு அன்புரிமையுடன் அழைத்து நிற்பதாக ஜனநாயகபோராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் க.துளசி ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திகுறி ப்பில் தெரிவித்துள்ளார்.

திலீபன் அவர்களது நினைவுநாட்கள் நடைபெறும் இக்காலங்களில் உறவுகள் கோரிக்கை களியாட்டங்களை தவிர்த்து திலீ பனின் நினைவுகளைச்சுமந்து உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்குமாறு தாயக மற்றும் புலம்பெயர் உறவுகளையும் வேண்டிநிற்கி ன்றோம். 

திலீபன் எங்களோடு இல்லாமல் இரு க்கலாம் திலீபனின் கனவு இன்னமும் சுவாசித்துக்கொண்டுதான் இருக்கிறது. 
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila