வடக்கில் புலிகளை நினைவு கூர்ந்தால் அது குறித்து கவனம் செலுத்தப்படும் இராணுவத் தளபதி மஹேஸ் சேனநாயக்க தெரிவிப்பு

வடக்கில் உயிரிழந்த தமிழ் மக் களை நினைவுபடுத்துவது பிரச் சினை அல்லவென்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக மாவீரர் தினமோ அல்லது பிறிதொரு தினமோ நடத்தப்படுமானால் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண் டும் என இராணுவம் தெரிவித்து ள்ளது. இராணுவ தளபதி லெப்டி னன்ட் ஜெனரல் மஹேஸ் சேன நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் 69-வது வருட பூர்த்தியை முன்னிட்டு அநுராதபுரம் ஜயசிறி விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர்

ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
உயிர் நீத்த தமிழ் மக்களுக்கான ஞாப கார்த்த நினைவுகள் அனுஷ்டிக்கப்படுமா னால் அது தவறில்லை. 

எனினும் தமி ழீழ விடுதலைப் புலி களுக்காக அஞ்சலி செலுத்தப்படுமா னால் அது குறித்து அவதானம் செலுத் தப்பட வேண்டும். இது தொடர்பில் நாட் டில் முரண்பாடு ஏற்ப டக்கூடும்.

 எனினும் இந்த செயற்பாடானது நாட் டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்ப டுத்தாது என்றும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜென ரல் மஹேஸ் சேன நாயக்க தெரிவித்து ள்ளார்.  
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila