வனவளத்திணைக்களத்தால் தமிழ் விவசாயிகள் கைது!

அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டமடு தோணிக்கல் பிரதேசத்தில், மகாபோக நெற்செய்கைக்காக வயல் வேலையில் ஈடுபட்டிருந்த 17 பேர், வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளால் இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளனரென, திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
வயல்வெளியைத் துப்பரவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 06 முஸ்லிம்களும் 11 தமிழர்களும் கைது செய்யப்பட்டுள்ளதோடு, ஒரு உழவு இயந்திரமும், மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை, நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வட்டமடு பிரதேசம், நீண்ட காலமாக மேய்ச்சத் தரையா அல்லது வேளாண்மை செய்யும் காணியா என பெரும் சர்ச்சை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila