பறிக்கப்பட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பொருட்களும் சந்திரகுமாரின் அரசியலும்

ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், வடமாகாண சபை உறுப்பினர் தவநாதன்,கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் மனோகரன் ஆகியோர் கிளிநொச்சியில் அனர்த்த முகாமைத்துவப்பிரிவின் பொருட்களை நேற்று முன்தினம் வலுக்கட்டாயமாக எடுததுச் சென்றனர்.
உத்தியோகத்தர்கள் முன்னிலையில் தமது அதிகார வெறியை அரங்கேற்றியிருந்தார்கள். அவ்வாறு பெற்றுக்கொண்ட பொருட்களை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கண்டாவளை, உழவனூர்மக்களுக்கு தாம் வழங்கியதாக கூறி பித்தலாட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
பொருட்கள் வழங்கப்பட்டபோது எந்தவொரு அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தரும் கலந்து கொள்ளவில்லை.
இதில் நகைப்புக்குரிய விடயம் யாதெனில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நுளம்பு வலையும் பாயும் கொடுத்த சந்திரகுமாரும் தவநாதனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சித்து அரசியல் பிரச்சாரங்களை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கே மேற்கொள்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila