வலி.வடக்கில் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட காணிகளைப் பார்க்க சில பகுதிகளிற்கே மக்கள் அனுமதி

வலி.வடக்கில் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட காணிகளைப் பார்க்க  சில பகுதிகளிற்கே மக்கள் அனுமதி

 வலி.வடக்கில் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட காணிகளைபார்க்க சென்ற மக்களில் ஒரு பகுதியினரே தமது காணிகளைப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். யாழ்.மாவட்டத்தில் உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட காணிகள் விடுவிப்பின் 2 ஆம் கட்டமாக 590 ஏக்கர் காணிகள் இன்று  விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டதுடன் அதனை மக்களும் பார்வையிட அனுமதி வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. 
 

அதன்படி தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட காங்கேசன்துறை தெற்கு (ஜே - 235 கிராம அலுவலர்), பளை வீமன் காமம் வடக்கு (ஜே - 236 கிராம அலுவலர்), பளை வீமன்காமம் தெற்கு (ஜே - 237 கிராம அலுவலர்), கட்டுவன் (ஜே - 238 கிராம அலுவலர்), தென்மயிலை (ஜே - 240 கிராம அலுவலர்), வறுத்தலைவிளான் (ஜே - 241 கிராம அலுவலர்), தையிட்டி தெற்கு (ஜெ - 250 கிராம அலுவலர்), பலாலி தெற்கு (ஜே - 252 கிராம அலுவலர்) ஆகியவற்றின் காணிகளும் கோப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட வளலாய் (ஜே - 284 கிராம அலுவலர்) காணிகளும் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பினையடுத்து ஆயிரக்கணக்கில் இடம்பெயர்ந்த மக்கள் திரண்டிருந்தனர்.ஆனால் தாங்கள் படிப்படியாகவே காணிகளை விடுவிக்கப்போவதாக தெரிவி;த்து சில பகுதிகளிற்கே மக்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனால் பெரும்பாலான குடும்பங்கள் தங்களது காணிகளினை எட்டிப்பார்க்க கூட முடியாது திரும்பவேண்டியிருந்தது. 
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila