யாழில் 10 ஆயிரத்து 496 குடும்பங்களுக்குச் சொந்தமான 7 ஆயிரத்து 779 ஏக்கர் நிலம் படையினர் வசம்

யாழில் 10 ஆயிரத்து 496 குடும்பங்களுக்குச் சொந்தமான  7 ஆயிரத்து 779 ஏக்கர் நிலம் படையினர் வசம்:-

 
யாழ்.மாவட்டத்தில் முப்படைகள் மற்றும் காவல்துறை வசம் 10 ஆயிரத்து 496 குடும்பங்களுக்குச் சொந்தமான  7 ஆயிரத்து 779 ஏக்கர் நிலம் இன்னறும் விடுவிக்கப்படாமல் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது..

யாழ்.மாவட்டத்தில் யுத்த முடிவின் பின்னரும் பொது மக்களுக்குச் சொந்தமான பெருமளவு நிலம் உயர்பாதுகாப்பு வலயமாக  கையகப் படுத்தப்பட்டிருக்கின்றது. இவற்றுக்கும் மேலதிகமாக கடற்படையினர், படையினர் மற்றும் காவல் துறையினர் பொதுமக்களுக்குச் சொந்தமான பெருமளவு நிலத்தை வெளியேயும் கையகப்படுத்தி வைத்திருக்கின்றனர்.

மாவட்டத்தில் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் சுமார் 10 ஆயிரத்து 359 குடும்பங்களுக்குச் சொந்தமான சுமார் 7ஆயிரத்து 608.07 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப் பட்டிருக்கின்றது. இதில் வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. மேலும் கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ்,112 குடும்பங்களுக்குச் சொந்தமான 151.04 ஏக்கர் நிலம் கையகப் படுத்தப்பட்டிருக்கின்றது. இதேவேளை காவல் துறையின்  கட்டுப்பாட்டின் கீழ் 25 குடும்பங்களுக்குச் சொந்தமான 18.87 ஏக்கர் நிலம் கையகப் படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் யாழ்.குடாநாட்டில் மொத்தமாக 10 ஆயி ரத்து 496 குடும்பங்களுக்குச் சொந்தமான சுமார், 7779 ஏக்கர் காணி படையினரிர், மற்றும் கடற்படையினர், பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் கையகப்படுத்தப் பட்டிருக்கின்றது. இதேவேளை யாழ்.குடாநாட்டில் உள்ள 15 பிரதேச செயலர் பிரிவுகளில் காரைநகர், சண்டிலிப்பாய், பருத்துறை, உடுவில் ஆகிய பகுதிகளில் படையினர் பொதுமக்களுடைய காணிகள் எதனையும் கையகப்படுத்தியிராத நிலையில், கடற்படையினர் மற்றும் காவல்துறையினர் பொதுமக்களின் காணிகளை கையப்படுத்தி வைத்திருக்கின்றனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila