வெள்ளைக்கொடி சம்பவம் பொய் என்று சாட்சியமளித்தாராம் தமிழ்ச்செல்வனின் மனைவி! - பரணகம ஆணைக்குழு கூறுகிறது


வெள்ளைக்கொடி சம்பவம் பொய் என்று விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் மனைவி சசிரேகா, சாட்சியமளித்துள்ளதாக மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையை மேற்கோள்காட்டி திவயின பத்திரிகை செய்தியை வெளியிட்டுள்ளது. இராணுவத்தினரிடம் சரணடைய வந்த எவரும் வெள்ளைக்கொடி ஏந்தி வரவில்லை என்றும் அவர் சாட்சியமளித்துள்ளார்.
வெள்ளைக்கொடி சம்பவம் பொய் என்று விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் மனைவி சசிரேகா, சாட்சியமளித்துள்ளதாக மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையை மேற்கோள்காட்டி திவயின பத்திரிகை செய்தியை வெளியிட்டுள்ளது. இராணுவத்தினரிடம் சரணடைய வந்த எவரும் வெள்ளைக்கொடி ஏந்தி வரவில்லை என்றும் அவர் சாட்சியமளித்துள்ளார்.
           
ஆனாலும் பீ.பீ.சி.யின் செய்தியாளர் பிரான்சிஸ் ஹரிசனின் செய்தியொன்றில் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோர் வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்திருந்ததாக வலியுறுத்தப்பட்டிருந்தது. இவ்வாறான பரஸ்பர விரோத சாட்சியங்கள் மற்றும் கருத்துக்கள் காரணமாகவே வெள்ளைக்கொடி சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு சிபாரிசு செய்துள்ளதாகவும் குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila