காலி கராபிட்டிய பிரதேசத்தில் ஜஸ்டின் கந்த கிராமத்தை பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் சுற்றி வளைத்து தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு ஆரம்பமாகிய இத்தேடல் நடவடிக்கை நேற்றும் தொடர்ந்ததாக தெரியவருகின்றது.
இப்பிரதேசத்தில் சுமார் 75 வீடுகள் உள்ளதாகவும் மனிதப் படுகொலைகள், மோசமான குற்றங்களுடன் தொடர்புடைய பலர் இங்கு ஆயுதங்கள் மற்றும், போதைப் பொருட்களை மறைத்து வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை நடத்தப்பட்டுள்ள தேடலில் கஞ்சா , ஹெரோயின் உட்பட போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
சுமார் 40 விசேட அதிரடிப் படையினர் மற்றும் 140 பொலிஸ் அதிகாரிகள் இத்தேடலில் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரியவருகின்றது.
இருப்பினும் இந்தத் தேடுதல் நடவடிக்கை குறித்து உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் நள்ளிரவு ஆரம்பமாகிய இத்தேடல் நடவடிக்கை நேற்றும் தொடர்ந்ததாக தெரியவருகின்றது.
இப்பிரதேசத்தில் சுமார் 75 வீடுகள் உள்ளதாகவும் மனிதப் படுகொலைகள், மோசமான குற்றங்களுடன் தொடர்புடைய பலர் இங்கு ஆயுதங்கள் மற்றும், போதைப் பொருட்களை மறைத்து வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை நடத்தப்பட்டுள்ள தேடலில் கஞ்சா , ஹெரோயின் உட்பட போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
சுமார் 40 விசேட அதிரடிப் படையினர் மற்றும் 140 பொலிஸ் அதிகாரிகள் இத்தேடலில் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரியவருகின்றது.
இருப்பினும் இந்தத் தேடுதல் நடவடிக்கை குறித்து உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.