அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் மூன்றாவது நாளாக தொடர்கின்றது


அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் இருவர் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதம் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தமிழ் அரசியல் கைதிகள் இருவரும் கடந்த திங்கட்கிழமை முதல் தம்மீதான விசாரணைகளை துரிதப்படுத்தக்கோரி தமது உண்ணாவிரதத்தை ஆரம்பித்ததாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் இரு தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப்போராட்டத்தை தொடரும் நிலையில் குறித்த இருவரும் உடல் நலத்துடன் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரு கைதிகளினதும் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை சட்டமாஅதிபரிடம் கையளிக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை இன்று புதன்கிழமை மகசின் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila