இரும்புத்திருட்டில் இராணுவமா; யாழில் மக்கள் குற்றச்சாட்டு!

sl

இரா­ணு­வத்­தைச் சேர்ந்­த­வர் என்று கூறிக்­கொள்­ளும் இளை­ஞர் ஒரு­வர் இரவு வேளை­க­ளில் கைதடி தொடக்­கம் நாயன்­மார்கட்டு மாய­னம் வரை­யான பகு­தி­க­ளில் இரும்­புக் கம்­பி­க­ளைத் திருடி விற்­கின்­றார் என்று பிர­தேச மக்­கள் குற்­றஞ்­சாட்­டு­கின்­ற­னர்.
நாவற்­கு­ழி­யைச் சேர்ந்த இந்த இளை­ஞர் அதி­காலை பச்சை நிற ரீசேட், காற்­சட்டை அணிந்து கறுப்பு நிற மூக்­குக் கண்­ணா­டி­யு­டன் கைதடி, பனை அபி­வி­ருத்­திச் சபை அமைந்­துள்ள பகு­தி­ யில் இருந்து, நாயன்­மார்­கட்டு இந்து மயா­னம் வரை­யான பகு­தி­க­ளில் இரும்­பு ­க­ளைத் திரு­டு­கின்­றார். அரச திணைக்­க­ளங்­கள், தனி­யார் நிறு­வ­னங்­க­ளின் பாதா­கை­கள் பொருத்­தப்­பட்­டி­ருக்­கும் இருப்­புக் கம்­பி­களை அப­க­ரி­கின்­றார்.
இது தொடர்­பாக அவ­ரி­டம் யாரா­வது கேட்­டால் தான் நாவற்­குழி இரா­ணுவ முகா­மைச் சேர்ந்­த­வர் என்­றும், தனது சகோ­த­ரன் கைதடி இரா­ணுவ முகா­மில் இரா­ணுவ அதி­கா­ரி­யா­கக் கட­மை­யாற்­றி­னார், தற்­போது கொழும்­பில் கட­மை­யாற்­று­கின்­றார் என்­றும் கூறு­கி ன்­றார்.
இரா­ணுவ முகாம் தேவைக்கே தாம் இவ்­வாறு இரும்­பு­களை எடுக்­கின்­றேன் என்று கூறு­கின்­றார். ஆனால் அவர் யாழ்ப்­பா­ணம், ஐந்­து­சந்­தி­யில் உள்ள கடை ஒன்­றித் தினம் இரும்­பு­களை விற்­கின்­றார் என்று பிர­ தேச வாசி­கள் கூறு­ கின்­ற­னர். இந்த விட­யத்­தில் சம்­பந்­தப்­பட்­டோர் தலை­யிட்டு திருட்டு நடப்­ப­தைத் தடுக்க வேண்­டும் என்­றும் அவர்­கள் கோரிக்கை விடுத்­த­னர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila