ஐ.பி.சியில் இருந்து விலகினார் இரவி அருணாச்சலம்!


தமிழீழ விடுதலைப் புலிகளுக்குக் களங்கம் கற்பித்த ஐ.பி.சி நிறுவனத்தால் உயர்ந்த ஊதியத்தில் வழங்கப்பட்ட பத்திரிகை ஆசிரியர் பதவியைத் துச்சமென மதித்து, அப்பதவியைத் தூக்கியெறிந்து ஐ.பி.சி நிறுவனத்தில் இருந்து இரவி அருணாச்சலம் அவர்கள் விலகியுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவித்தலை நேற்று 17.05.2017 புதன்கிழமை இரவு தனது முகநூல் ஊடாக இரவி அருணாச்சலம் அவர்கள் வெளியிட்டுள்ளார். இரவி அருணாச்சலம் அவர்களின் இந்த முடிவு தமிழ்த் தேசிய உணர்வாளர்களின் அமோக வரவேற்பிற்கு உள்ளாகியிருக்கின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்குக் களங்கம் கற்பித்த ஐ.பி.சி நிறுவனத்தால் உயர்ந்த ஊதியத்தில் வழங்கப்பட்ட பத்திரிகை ஆசிரியர் பதவியைத் துச்சமென மதித்து, அப்பதவியைத் தூக்கியெறிந்து ஐ.பி.சி நிறுவனத்தில் இருந்து இரவி அருணாச்சலம் அவர்கள் விலகியுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவித்தலை நேற்று 17.05.2017 புதன்கிழமை இரவு தனது முகநூல் ஊடாக இரவி அருணாச்சலம் அவர்கள் வெளியிட்டுள்ளார். இரவி அருணாச்சலம் அவர்களின் இந்த முடிவு தமிழ்த் தேசிய உணர்வாளர்களின் அமோக வரவேற்பிற்கு உள்ளாகியிருக்கின்றது.
           
அதுவும் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நிகழ்ந்தேறிய துயர்தோய்ந்த நாட்களில் மாவீரர்களின் தியாக வரலாற்றிற்கும், மடிந்த மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் இரவி அருணாச்சலம் அவர்கள் எடுத்துள்ள முடிவு அவர் மீதான மதிப்பை உயர்த்தியுள்ளது. இது இவ்விதம் இருக்க இரவி அருணாச்சலம் அவர்களின் முடிவு ஐ.பி.சி நிறுவனத்திற்குள் எதிர்வரும் நாட்களில் மேலும் நெருக்கடிகளைத் தோற்றுவிக்கக்கூடும் என்றும், அடுத்தது என்ன நடக்கும் என்று குழப்பத்தில் ஐ.பி.சி பணியாளர்கள் சிலர் இருப்பதாகவும் ஐ.பி.சியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila