ஆளுனருக்கு எதிரான யாழ். மேல் நீதிமன்றத் தீர்ப்பு! - மேல்முறையீடு செய்ய சட்டமா அதிபர் திட்டம்


யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் கட்டளைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் முறையீடு செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ். மேல்நீதிமன்றில் வழங்கப்பட்ட தீர்ப்பு ஆளுநரின் தீர்மானத்துக்கு எதிராக அமைவதால், மேல்முறையீடு தொடர்பில் ஆராயப்படுவதாகவும் கூறப்படுகிறது. யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் கட்டளைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் முறையீடு செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ். மேல்நீதிமன்றில் வழங்கப்பட்ட தீர்ப்பு ஆளுநரின் தீர்மானத்துக்கு எதிராக அமைவதால், மேல்முறையீடு தொடர்பில் ஆராயப்படுவதாகவும் கூறப்படுகிறது.
           
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் மரியதாசன் ஜேகூ, அவுஸ்திரேலியாவில் கல்வி­யைத் தொடர வெளி­நாடு செல்­ல அனுமதி கோரியிருந்தார். எனி­னும் அவ­ரது விண்­ணப்­பத்­துக்கு வடக்கு மாகாண ஆளு­நர் அனு­மதி வழங்க முன்­னதா­கவே மரியதாசன் ஜேகூ, அவுஸ்­தி­ரே­லியா சென்­று­விட்­டார்.இத­னால் ஆளு­ந­ரின் அறி­வு­றுத்­த­லுக்­க­மைய ஜெகூ மீள கட­மைக்கு அழைக்­கப்­பட்­டார். அத்­து­டன் ஒழுக்காற்று நடவடிக்­கைக்­கும் அவர் உட்­ப­டுத்­தப்­பட்­டார்.
ஆளு­ந­ரின் இந்த நட­வ­டிக்­கைக்கு எதி­ரா­க­வும், தனது வெளி­நாடு செல்­லும் விண்­ணப்­பத்­துக்கு அனுமதி வழங்குமாறும் கோரி, ஜேகூ யாழ். மேல் நீதி­மன்­றில் எழுத்­தாணை மனு­வைத் தாக்­கல் செய்­தார். அந்த மனு மீதான விசா­ர­ணை­யின் பின்­னர் மனு­வில் அவர் கோரிய அனு­கூ­லங்­களை மேல் ­நீ­தி­மன்று நீதி­பதி மா. இளஞ்­செ­ழி­யன் நேற்­று ­முன்­தி­னம் வழங்­கி­னார். இதன்போது, “வடக்கு மாகாண ஆளுநர் மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர். எனினும் அவர் ஆற்றுகின்ற பணிகள் மாகாண அதிகாரத்துக்கு உட்பட்டவை. எனவே ஆளுநருக்கு உத்தரவிடும் அதிகாரம் மாகாண மேல் நீதிமன்றுக்கு உள்ளது. அதனடிப்படையில் மனுதாரர் வெளிநாட்டில் கல்வியைத் தொடர்வதற்கான அனுமதியை வழங்க மன்று கட்டளையிடுகின்றது. இந்தக் கட்டளையின் பிரதி அவுஸ்திரேலிய தூதரகத்துக்கும் அனுப்பிவைக்கப்பட வேண்டும்” என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கட்டளையிட்டிருந்தார்.
இந்த நிலையில், யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் குறித்த கட்டளைக்கு எதிராகவே மேன்முறையீட்டு நீதிமன்றில் முறையீடு செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் ஆலோசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila