தேரர்களால் இன­வா­த­மும் முரண்­பா­டு­க­ளும் இலங்கையில் தீரப்போவதில்லை!

inavatham

தனி­நாடு ஒன்று இல்­லா­ததே இலங்­கை­யில் உள்ள தமி­ழர்­க­ளின் முதன்­மைப் பிரச்­சினை. தமி­ழர்­க­ளுக்­குப் பிரச்­சினை இல்லை என்று நாம் கூறக்­கூ­டாது. நாடு இல்லை என்­ப­து­தான் அவர்­க­ளின் முக்­கிய பிரச்­சினை.
அவர்­கள் தமிழ் நாட்­டுக்­குச் சென்று அல்­லது மலே­சியா, கனடா போன்ற நாடு­க­ளுக்­குச் சென்று அங்கு ஒரு பகு­தி­யைத் தனி­நா­டா­கக் கோர­வேண்­டும்.
இலங்­கை­யை ­வி­ட­வும் அதி­க­ள­வான தமி­ழர்­கள் வாழ்­கின்ற நாடு­கள் உள்­ளன. அங்கு சென்று சுய­நிர்­ணய உரி­மை­யு­டன் அத­னைப் பெற்­றுக்­கொள்­ளுங்­கள்.
இப்­ப­டித் திரு­வாய் மலர்ந்­த­ரு­ளி­யி­ருக்­கி­றார் மெத­கொட அப­ய­திஸ்ஸ தேரர். சிறி­லங்கா பாளி மொழி மற்­றும் பௌத்த பல்­க­லைக்­க­ழ­கத்­தின் மூத்த விரி­வு­ரை­யா­ளர் அவர்.
பாது­காப்பு அமைச்­சின் முன்­னாள் செய­லா­ள­ரும்  மகிந்த ராஜ­பக்­ச­வின் தம்­பி­யு­மான கோத்­த­பா­ய­வின் அமைப்­பான ‘எதிர்­பார்ப்­பு­களை ஏற்­றி­வைக்­கும் ஒளி’ என்ற அமைப்­பின் உறுப்­பி­ன­ரா­க­வும் அவர் இப்­போது இருக்­கி­றார்.
புதிய அர­ச­மைப்பை எதிர்த்து மக்­க­ளி­டம் பரப்­புரை செய்­வதை நோக்­க­மா­கக் கொண்டு இந்­தப் புதிய அமைப்பு உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.
புதிய அர­ச­மைப்­புக்கு எதி­ராக மகிந்த தரப்பு பச்சை இன­வா­தத்­தையே கையில் எடுத்­துப் பரப்­புரை செய்­யப்­போ­கின்­றது என்­ப­தற்கு தேர­ரின் கருத்தே போது­மான சான்று.
தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னையை எள்ளி நகை­யாடி, அவர்­க­ளைத் தூசாக நினைத்துத் தூக்­கி­யெ­றிந்து பேசக்­கூ­டிய இந்த இன­வா­தப் போக்­குக்கு இந்த நாட்­டில் இன்­ன­மும் அனு­மதி வழங்­கப்­ப­டு­கி­றது என்­ப­து­தான் கவ­லைக்­கு­ரி­யது.
அதற்கு அனு­ம­தி­யும் வழங்­கி­விட்டு, அவர்­கள் அப்­படி இன­வா­தம் பேசு­வ­தா­லேயே சிறு­பான்­மை­யி­ன­ருக்கு உரி­மை­களை வழங்­கு­வது முடி­யாத காரியமாக இருக்­கின்­றது என்று அரசு சப்­பைக்­கட்டு கட்­டு­வது அதை­வி­ட­வும் வேத­னை­யா­னது.
இத்­த­கைய சிங்­கள மேலா­திக்­க­வாத இன­வா­தப் பேச்­சுக்­க­ளும் செயல்­க­ளும்­தான் இலங்­கை­யில் இனங்­க­ளி­டையே மிக மோச­மான பகை­மை­யை­யும் ஆயுத மோத­லை­யும் உரு­வாக்­கி­ன.
அழி­வு­க­ளை­யும் கொண்டு வந்­தன. உலக நாடு­கள் மத்­தி­ யில் இலங்கை இன்று தலை­கு­னிந்து நிற்­ப­தற்­கும் அவையே காரணமாகின. ஆனா­லும் மீண்­டும் மீண்­டும் அதே சிங்­கள இன­வா­தம் தளைத்­துக்­கொண்டே இருக்­கி­றது.
அத­னைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு எந்­த­வொரு அர­சும் இது­வ­ரை­யில் போதிய நட­வ­டிக்கை எடுத்­த­தாக இல்லை. அதற்­குப் பதி­லாக அந்த இன­வாதத்­தைக் கண்டு அஞ்சி நடுங்­கித் தமது வாக்கு வங்கி அத­னால் பாதிக்­கப்­பட்­டு­வி­டுமோ என்று ஏங்­கித் தவிக்­கும் அர­சை­யும் ஆட்­சி­யா­ளர்­க­ளை­யுமே இது­வ­ரை­யில் காண­மு­டிந்­தி­ருக்­கி­றது.
நல்­லாட்சி அரசு என்று கூறிக்­கொண்டு பத­விக்கு வந்த மைத்­திரி  ரணில் அர­சும்­கூட அதே­பா­ணி­யில்­தான் நடந்­து­கொள்­கி­றது என்­பது ஏற்­றுக்­கொள்ள முடி­யா­ததாக இருக்­கின்­றது.
சிறு­பான்மை இன மக்­க­ளின் வாக்­கு­க­ளால்­தான் இன்று பத­வி­யில் இருக்­கும் அர­சுக்­கும் தலை­வர்­க­ளுக்­கும் வாழ்வு கிடைத்­தது என்­றா­லும், சிங்­கள இன­வா­தத்­தைக் கட்­டுப் ப­டுத்தி நாடு சகல இன, மத மக்­க­ளுக்­கும் உரி­யது என்­கிற பாது­காப்­பு­ணர்வை வழங்­கு­வ­தற்கு இந்த அர­சும் தவ­றி­விட்­டது என்­ப­தற்­கான உதா­ர­ணமே மெத­கொட அப­ய­திஸ்ஸ தேர­ரின் கருத்து.
அவ­ரது கருத்து இன­வா­தத்­தைக் கக்­கு­வ­தாக இருக்­கும் அதே­நே­ரம், தாம் வாழும் நாடு­க­ளில் தமக்­கொரு தனி­நாடு கோரும் உரி­மை­யைத் தமி­ழர்­கள் கொண்­டி­ருக்­கி­றார்­கள் என்­கிற ரீதி­யில் தேரர் இந்­தக் கருத்­தைத் தெரி­வித்­தி­ருந்­தால் அவர்­கள் இலங்­கை­யில் தனி­நாடு கோரு­வ­தி­லும் தவ­றில்­லையே! இந்­தி­யா­வி­லும் மலே­சி­யா­வி­லும் தனி­நாடு கோரு­வ­தற்கு தமி­ழர்­க­ளுக்கு உரித்­துண்டு என்று தேரர் நினைத்­தால் அதே­ய­ளவு உரித்து இலங்­கை­யி­லும் தமி­ழர்­க­ளுக்கு உண்டு.
ஏனெ­னில் இலங்­கை­யின் வர­லாறு முழு­வ­தும் தமி­ழர்­க­ளும் இங்கு வாழ்ந்­தி­ருக்­கி­றார்­கள்; ஆண்­டி­ருக்­கி­றார்­கள். நிழல் அர­சு­க­ளை­யும் நடத்­தி­யி­ருக்­கி­றார்­கள். எனவே இங்கு தமக்­கென்­றொரு தனி­நாடு கோரும் உரிமை அவர்­க­ளுக்கு இருக்­கி­றது.
இதே­வேளை, புதிய அர­ச­மைப்­புக்கு ஊடா­கத் தமி­ழர்­கள் தனி­நா­டும் கேட்­க­வில்லை. இடைக்­கால அறிக்­கை­யின் ஆரம்­பத்­தி­லேயே தனி­நாடு குறித்­துப் பேசு­வ­து­கூ­டக் குற்­றம் என்று திட்­ட­வட்­ட­மாக வரை­ய­றுக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், தமி­ழர்­க­ளின் தேவை தனி­நாடு தான் என்­றும், அதற்­கா­கத்­தான் புதிய அர­ச­மைப்­பென்­றும் முழுப் பூச­ணிக்­காயை சோற்­றில் மறைத்து சிங்­கள மக்­களை நம்­ப­வைக்க முயற்­சிக்­கும் தேரர் போன்­றோ­ரின் இன­வா­தத்­தைக் கட்­டுப்­ப­டுத்த அரசு நட­வ­டிக்கை எடுக்­கா­த­வ­ரை­யில், பதில் இன­வா­த­மும் முரண்­பா­டு­க­ளும் சண்­டை­யும் தீர்­வ­தற்­கான சாத்­தி­யங்­கள் ஏற்­ப­டப்­போ­வ­தில்லை.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila