அமைச்சர்களிற்கு இல்லை:சுமந்திரனிற்கு உண்டு?


sumanthiran and dugles 03

இலங்கை அமைச்சர்கள் சிலருக்கு வழங்கப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள போதும் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தனுக்கும் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் மாற்றங்கள் செய்யப்படவில்லையென சொல்லப்படுகின்றது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்ற காலப்பகுதியில் அமைச்சர்களான திகாம்பரம், மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் விசேட பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அமைச்சர் சாகல ரத்னாயக்க மற்றும் இராஜாங்க அமைச்சர் பியசேன கமகே ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த காவல்;துறையின் விசேட பாதுகாப்பும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனிற்கான பாதுகாப்பு ஏற்பாடு மாற்றம் செய்யப்படவில்லையென கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் அவர் சிங்கள அமைச்சர்களை தாண்டிய பிரமுகராக இந்த அரசில் உள்ளமை அம்பலமாகியுள்ளது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila