முல்லைத்தீவில் வாள்வெட்டில் மூவர் படுகாயம் - வெட்டவந்த ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் காயம்!


முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, கைவேலி மருதமடு குளம் பகுதியில் நேற்று இரவு 11.00 மணியளவில் ஆறு பேர் கொண்ட கும்பல் வாள்களுடன் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த மூவரை வாளால் வெட்டிப் படுகாயப்படுத்தியது.  இதன்போது நாட்டு துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான வாள்வெட்டு கும்பலை சேர்ந்த ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில்  அனுராதபுரம் மருத்துவ மனை கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, கைவேலி மருதமடு குளம் பகுதியில் நேற்று இரவு 11.00 மணியளவில் ஆறு பேர் கொண்ட கும்பல் வாள்களுடன் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த மூவரை வாளால் வெட்டிப் படுகாயப்படுத்தியது. இதன்போது நாட்டு துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான வாள்வெட்டு கும்பலை சேர்ந்த ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் அனுராதபுரம் மருத்துவ மனை கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

கைவேலி- மருதமடுகுளம் பகுதியில் வீடு ஒன்றிற்குள் புகுந்த ஆறு பேர் கொண்ட வாள்வெட்டு கும்பல், அங்கிருந்த தாய், தந்தை, மகன் மீது கண்மூடித்தனமாக வாள்வெட்டு தாக்குதல் நடத்தியது. இதன்போது 45 வயதுடைய செல்வகுமார் 43 வயதுடைய செ.குசேலகுமாரி மற்றும் 21 வயதுடைய மகனான செ.கோபிநாத் ஆகியோர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தனர்.
அதேவேளை, வாள்வெட்டுக் கும்பல் மீது நாட்டுத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது அந்தக் குழுவைச் சேர்ந்த 4ஆம் வட்டாரம் கோம்பாவிலைச் சேர்ந்த 22 வயதுடைய திருச்செல்வம் கபிலன் என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனை கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் மருத்துவ மனையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை வாள்வெட்டில் காயமடைந்த தந்தை மற்றும் மகன் ஆகியோர் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிசிக்சைக்காக மாவட்ட மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். வாள்வெட்டில் காயமடைந்த தாயார் புதுக்குடியிருப்பு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila