என்னை விமர்சிப்பதை விடுத்து பெரும்பான்மையை நிரூபியுங்கள் மகிந்த அணிக்கு சபாநாயகர் சவால்

பாராளுமன்றத்தில் தங்கள் பெரும்பான்மையை உரிய முறை யில் நிரூபிக்க முடியாத அரசியல் கட்சிகள், செய்தியாளர் மாநாடுகளி லும் ஆர்ப்பாட்டங்களிலும் சபாநா யகரிற்கு எதிராக ஆதாரமற்ற 
குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை அவதானி;க்க முடிகின்றது

என சபாநாயகர் கரு ஜெயசூரியவின் ஊடகப்பிரிவு அறிக்கையொன்றில் தெரிவித் துள்ளது.
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் 225 பாராளுமன்ற உறுப்பினர்க ளில் நான்கு கட்சிகளை சேர்ந்த 122 உறுப்பினர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு எழு த்தின் மூலம் சவால் விடுத்துள்ளனர் என  சபாநாயகரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. 
மேலும் பாராளுமன்றின் பாரம்பரியத்தி ற்கு ஏற்ப பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தினை செவிமடுப்பது சபாநாயக ரி;ன் தவிர்க்க முடியாத கடமை எனவும் குறி ப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக சபாநாயகரின்  நிலைப் பாட்டை பக்கச்சார்பானது என சித்திரித்து பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியே யும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை எனவும் சபாநாயகரின் ஊடக பிரிவு  தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதை விட தற்போதைய அரசாங்கத்திற்கு பாராளு மன்றில்  பெரும்பான்மையுள்ளது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பது விவேக முள்ள செயலாக அமையும் எனவும் சபாநா யகரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila