சமஷ்டியை அறியாதவர்கலே பிரிவினை துண்டுகின்றனர்! ஒற்றையாட்சிக்குள்ளேயே அதிகாரம் பகிரப்படும் என்கிறார் ராஜித

அரசாங்கம் சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்தப் போவதாக மேற்கொள்ளப்படும் பிரசாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தாவர் .

அத்துடன் எதிர்க்கட்சிகள் தேர்தலுக்கு செல்லவேண்டும் என தெரிவித்து வருகின்றனர். தற்போதைய நிலையில் தேர்தலுக்கு செல்லவேண்டும் என்றால் பரராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தேவை. 

அவ்வாறில்லாமல் இவர்களுக்கு தேர்தல் தேவை என்பதற்காக தேர்தலை நடத்த முடியாது எனவும் இதன்போது தெரிவித்தார்.

களுத்துறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “புதிய அரசமைப்பு வரைபை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழுவின் ஊடாக, அரசியலமைப்பு வரைபைத் தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனை நாம் வெகுவிரைவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கத் தீர்மானித்துள்ளோம்.

இதனையடுத்து, இது தொடர்பில் விவாதங்களை நடத்தி, கட்சி மற்றும் அனைத்து உறுப்பினர்களின் யோசனைகளையும் உள்வாங்கத் தீர்மானித்துள்ளோம். இந்த யோசனைகளைப் பெற்ற பின்னரே, இந்த வரைபை நாம் இறுதி செய்வோம்.

இந்தநிலையில், மகிந்த தலைமையிலான எதிரணியினர் தேவையில்லாமல் இந்த விவகாரம் தொடர்பில் பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்திக் கொண்டிருக்கின்றனர்.
அவர்களுக்கு எப்படியாவது அதிகாரத்துக்கு வந்து விட வேண்டும். இந்த அதிகார ஆசை 50 களிலேயே ஆரம்பித்துவிட்டது.

இதன் விளைவாகத் தான் நாட்டில் யுத்தம் கூட இடம்பெற்றது. ஒருமித்த நாட்டில் அதிகாரத்தை பகிர்வதானது எவ்வாறு சமஷ்டியாகும் என்பதுதான் எமது கேள்வியாக இருக்கிறது.

இதற்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் பலருக்கு, சமஷ்டியென்றாலோ, ஒருமித்த நாடு என்றாலோ, அதிகாரப் பரவலாக்கல் என்றாலோ என்னவென்றே தெரியாது.

இப்போது தேர்தல் வேண்டும் என்கிறார்கள். ஆனால், யாரும் நினைப்பதுபோல தேர்தல் ஒன்றை நாட்டில் நடத்திவிட முடியாது.

உரிய காலத்துக்கு முன்னர் நாடாளுமன்றைக் கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்வதாயின், நாடாளுமன்றின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகும்.
ஜனாதிபதிக்குக்கூட இந்த அதிகாரம் இல்லை என்பதை நிரூபித்துள்ளோம். 

எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தல் தான் முதலாவதாக இடம்பெறவுள்ளது. இதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila