இலங்கையில் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையின் உள்ளடக்கங்களை நான் வரவேற்கின்றேன் என வட மாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இப்புதிய ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கையானது புதிய செயன்முறையின் ஆரம்பமாகவும் உண்மைகளை வெளிக்கொணர்வதற்கான புதிய படிமுறையாகவும் இருப்பதுடன் இலங்கையில் பலக்காலமாக நிலவி வருகின்ற இனப்பிரச்சினைக்கு தீர்வினை எட்டி பாதிப்புற்ற மக்களிற்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வழிக்கோலுமென நம்புகின்றேன் என அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
நான் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் மனித உரிமைகள் மீறல்களிற்கு உட்பட்டுள்ளேன். இவ் வரைபில் காணப்படுகின்ற ஒரு சில குறைபாடுகள் இம்முழு செயற்பாட்டினையும் பாதிப்படையச் செய்யுமோ என்னும் அச்சம் என்னுள் நிலவுகின்றது, எனவும் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
எது எவ்வாறாயினும் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் உள்நாட்டு பொறிமுறையின்றி கலப்பு நீதிமன்ற முறை தொடர்பாக தெளிவான பரிந்துரைகள் முன்மொழியப்பட்டுள்ளமையினால் பொய்யான வாக்குறுதிகள் மற்றும் ஏனைய ஏமாற்று வித்தைகளிற்கு இடமிருக்காது என்பதுடன் பாதிக்கப்பட்டவர்களிற்கு உரிய நியாயம் கிட்டுவதுடன் அது உயர் நீதிமன்றின் பொறிமுறைக்கு உட்பட்டதாகவே அமைகின்றது, எனவும் விக்னேஸ்வரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இப்புதிய ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கையானது புதிய செயன்முறையின் ஆரம்பமாகவும் உண்மைகளை வெளிக்கொணர்வதற்கான புதிய படிமுறையாகவும் இருப்பதுடன் இலங்கையில் பலக்காலமாக நிலவி வருகின்ற இனப்பிரச்சினைக்கு தீர்வினை எட்டி பாதிப்புற்ற மக்களிற்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வழிக்கோலுமென நம்புகின்றேன் என அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
நான் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் மனித உரிமைகள் மீறல்களிற்கு உட்பட்டுள்ளேன். இவ் வரைபில் காணப்படுகின்ற ஒரு சில குறைபாடுகள் இம்முழு செயற்பாட்டினையும் பாதிப்படையச் செய்யுமோ என்னும் அச்சம் என்னுள் நிலவுகின்றது, எனவும் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
எது எவ்வாறாயினும் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் உள்நாட்டு பொறிமுறையின்றி கலப்பு நீதிமன்ற முறை தொடர்பாக தெளிவான பரிந்துரைகள் முன்மொழியப்பட்டுள்ளமையினால் பொய்யான வாக்குறுதிகள் மற்றும் ஏனைய ஏமாற்று வித்தைகளிற்கு இடமிருக்காது என்பதுடன் பாதிக்கப்பட்டவர்களிற்கு உரிய நியாயம் கிட்டுவதுடன் அது உயர் நீதிமன்றின் பொறிமுறைக்கு உட்பட்டதாகவே அமைகின்றது, எனவும் விக்னேஸ்வரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.